search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் கோவிலில் திருக்கல்யாண விழா

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை போன்றவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடந்தது.

    மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    முன்னதாக பிரதோஷத்தையொட்டி ரிஷப வாகனத்தில் சிவனையும், கருட வாகனத்தில் பெருமாளையும் அமர செய்து, கோவில் சுற்றுபிரகாரத்தை 3 முறை சுற்றி வந்தனர். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவில் சுசீந்திரம் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைத்தனர். தொடர்ந்து தாணுமாலயசாமி கையில் இருந்த திருமாங்கல்யம் அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்பட்டது. திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
    Next Story
    ×