search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய மாரியம்மன் வகையறா தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது
    X

    பெரிய மாரியம்மன் வகையறா தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    வருகிற 23-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது.

    ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது.

    4-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன், 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன், இரவு 10 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 6-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×