search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புளியங்குடி டி.என்.புதுக்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    புளியங்குடி டி.என்.புதுக்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.

    புளியங்குடி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

    புளியங்குடி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    புளியங்குடி டி.என்.புதுக் குடி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மகா சங்கல்பம், புண்யாவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், தனபூஜை, கலசபூஜை, கோபூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

    நேற்று முன்தினம் சிவசூர்ய பூஜை, மகா மண்டப பூஜை மற்றும் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பிம்பசுத்தி, 4-ம் கால யாகசாலை பூஜைகள், யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து 10 மணிக்கு கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் சப்பர வீதி உலா நடந்தது.

    கும்பாபிஷேக விழாவில் கண்ணா மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுபாஷ் கண்ணா, கண்ணா மருத்துவமனை டாக்டர் ரவீந்திரன், எம்.ஆர்.எஸ். முகஅழகியல் மருத்துவமனை டாக்டர் ராஜேஷ், பி.வி.பில்டர்ஸ் பாலமுருகன், ஆர்.எம்.பில்டர்ஸ் மாணிக்கம், அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி தாளாளர் முருகன், அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளி தாளாளர் சிதம்பரம், ஞானமுத்து நாடார் டிரேடர்ஸ் பரமசிவன், அரிசிக்கடை குமரேசன், கோகுலம் ஸ்டீல்ஸ் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நாடார் பேரவை ராஜ்ஜியம், இந்து நாடார் உறவின்முறைக்கமிட்டி முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன், பில்டிங் காண்டிராக்டர் மாரியப்பன், தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் முருகேசன், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் ராஜ், ஸ்ரீபாலாஜி ஜூவல்லர்ஸ் பழனி, எஸ்.கே.ஜூவல்லர்ஸ் ராமகிருஷ்ணன்,

    கே.பி.என்.டிராவல்ஸ் விவேகானந்தன், சுதன் மெடிக்கல்ஸ் மாரியப்பன், பத்திர எழுத்தர் வைகுண்டமணி, கீர்த்தி டிரேடிங் கண்ணன், காமராஜர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் சபரிநாதன், கண்ணன், குமார், முருகேசன், சின்னையா நாடார் சங்க நிர்வாகிகள், காவியத்தலைவன் நாடக சபா நிர்வாகிகள், மாரியம்மன் வாரச்சந்தா குழு நிர்வாகிகள், காமராஜர் மெமோரியல் சினிகிரிக்கெட் கிளப் மற்றும் காமராஜர் நினைவு ரத்ததானக்குழு நிர்வாகிகள் மற்றும் வன்னியராஜ், மணிவண்ணன், கருப்பையா, திருமலையாண்டி, கதிரேசன், சின்னச்சாமி, கருப்பசாமி, செல்வசிதம்பரகுமார், சரவணகுமார், முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நாட்டாண்மைகள், நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×