என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றம்
Byமாலை மலர்12 March 2019 9:46 AM GMT (Updated: 12 March 2019 9:46 AM GMT)
பரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய தங்க கதவு பொருத்தப்பட்டு அதை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்தார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய தங்க கதவு பொருத்தப்பட்டு அதை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்தார்.
இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 9 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியேற்றிவைக்க பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.
பங்குனி உத்திர திரு விழாவையொட்டி சபரி மலையில் ஐயப்ப பக்தர் கள் குவிந்து உள்ளனர். அவர்களை ஒழுங்குப்படுத்தி சாமி தரிசனம் செய்ய அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
சபரிமலை கோவிலில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இளம் பெண்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரி மலைக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அவர்களை தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்களும் போராட்டம் நடத்தலாம் என்பதால் சபரி மலையின் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய தங்க கதவு பொருத்தப்பட்டு அதை தந்திரி கண்டரரு ராஜீவரு பிரதிஷ்டை செய்தார்.
இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 9 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியேற்றிவைக்க பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.
பங்குனி உத்திர திரு விழாவையொட்டி சபரி மலையில் ஐயப்ப பக்தர் கள் குவிந்து உள்ளனர். அவர்களை ஒழுங்குப்படுத்தி சாமி தரிசனம் செய்ய அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
சபரிமலை கோவிலில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இளம் பெண்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். பங்குனி உத்திர திருவிழாவின் போதும் சபரி மலைக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அவர்களை தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்களும் போராட்டம் நடத்தலாம் என்பதால் சபரி மலையின் முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X