என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
Byமாலை மலர்22 Feb 2019 5:12 AM GMT (Updated: 22 Feb 2019 5:12 AM GMT)
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக பெருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி விபசித்து முனிவருக்கு பழமலைநாதர்(விருத்தகிரீஸ்வரர்) காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கடந்த 18-ந் தேதி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் தேரோட்டம் நடந்தது. 19-ந் தேதி மாசி மக உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி தெப்ப குளத்தை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, வீதிஉலா நடந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தெப்ப குளத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளியதும் தெப்ப உற்சவம் நடந்தது.
இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
பின்னர் கடந்த 18-ந் தேதி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் தேரோட்டம் நடந்தது. 19-ந் தேதி மாசி மக உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி தெப்ப குளத்தை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, வீதிஉலா நடந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தெப்ப குளத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளியதும் தெப்ப உற்சவம் நடந்தது.
இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X