என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்19 Feb 2019 5:10 AM GMT (Updated: 19 Feb 2019 5:10 AM GMT)
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X