search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா தொடங்கியது
    X

    வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா தொடங்கியது

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. விழா தொடர்ந்து 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பாலாபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும்,2-ம் நாள் சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 3-ம் நாள் தேவர் சமுதாயம், 4-ம் நாள் யாதவர் சமுதாயம், 5-ம் நாள் பட்டங்கட்டியார் சமுதாயம், 6-ம் நாள் அரிசன சமுதாயம், 7-ம் நாள் விஸ்வகர்மா சமுதாயம், 8-ம் நாள் செங்குந்த முதலியார் சமுதாயம், 9-ம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம், 10- நாள் திருவிழா நாடார் சமுதாயம், 11-ம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.

    10ம் நாள் திருநாளான வருகிற 19-ந் தேதி காலை கீழப்பாவூர் சிவன்கோவில், பனையடிப்பட்டி, குறும்பலாப்பேரி, செட்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான 20-ந் தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. திருவிழாக்களின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவுகள்- இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான எற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×