search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் 26-ம்தேதி தை அமாவாசை திருவிழா
    X

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் 26-ம்தேதி தை அமாவாசை திருவிழா

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் கோவிலுக்கு சங்குமுக தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.

    1-ம் திருவிழா முதல் 9-ம் திருவிழா வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 10-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், அபிஷேகம், மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.

    11-ம் திருநாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 6-ந்தேதி (புதன்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம், மங்கள தரிசனம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார். 
    Next Story
    ×