search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன் திருநாமம்
    X

    முருகன் திருநாமம்

    அடியார்களுக்கு நல்ல பெருமான் திருமகன் முருகன். முருகனை வழிபட்டு திருநாமத்தை இடைவிடாது சொல்கிறவர்களின் துன்பங்களை விலக்கிடுவான்.
    அடியார்களுக்கு நல்ல பெருமான் திருமகன் முருகன். வேண்டியவருக்கு வேண்டிய பொழுது அவர்கள் வேண்டியவாறே நல்குபவன். முருகனை வழிபட்டு திருநாமத்தை இடைவிடாது சொல்கிறவர்களின் துன்பங்களை விலக்கிடுவான். ‘முருகா’ என்று சொல்லும்போது அடியார்களின் வாயில் இன்பம் ஊறும். இறைவன் திருவுருவம் நேரே வந்து நிற்கும். யாத்திரை வரும் பக்தர்களுக்கு வழித்துணை, தைரியம், உண்டாகும்.

    முருகனை காண ஒரு முறை பழனி திருத்தலம் வந்தால் அன்புத்தேன் பொங்க முன்னே வந்து நின்றுவிடுவான். அடியார்களுக்கு அச்சமும், துன்பமும் உண்டானால் அவர்கள் ஆறுதல் பெறும்படி தன்னுடைய ஆறுமுகங்களை காட்டி அருள்புரிவான். நோய்நொடியும் அஞ்சும், வறுமை, பிணி, பகை முதலியவற்றை போக்கும் அருள் முருகன் ஒருவனுக்கே உண்டு. ‘முருகா’ என்று ஒதும் அடியார்களுக்கு அச்சம் என்பது இல்லை. மனப்போராட்டம் இல்லை. திருமார்பில் கடம்ப மாலை அணிந்தவன். முருகன் அமைதியாக வள்ளி, தெய்வானையோடு எழுந்தருளும் போது கடம்ப மாலையோடு விளங்குபவன். இக்காட்சி மனைவியோடு இன்ப வாழ்வு வாழவேண்டும் என்பதை போதிக்கின்றது.

    முருகன் ஞானசக்தியை கையில் ஏந்தியிருப்பவன். தன்னை அடைந்தாருடைய துயரத்தை போக்கும் அற்புதம் அவன். கதிர்வேலனாகிய அவனை பழனி திருத்தலத்தில் மூலத்திருவுருவத்தில் தரிசிக்கலாம். ஆசைகளை அடக்குவதும், இறைவனிடம் நம்பிக்கை பக்தி செய்வதும், குறைவில்லா நிறைவை அடையும் வழியாகும். நமக்கான குறைகளை, கஷ்டங்களை முருகனிடம் சொல்லும்போது மனப்பாரம் நிச்சயமாக நீங்குவதோடு உன்னை மட்டுமே நம்புகிறேன். பின்னை ஒருவரையான் பின் செல்வேன் என்று நம்பியவர்களுக்கு அருள் செய்து துன்பத்தை போக்கும் பேராற்றல் உடையவன் தண்டாயுதபாணி.

    தேவர்களும், தங்களின் இன்பங்களை இழந்து துன்புற்று சிறைபட்டு வாழும் நிலை வந்தது. அறுபத்தாறு கோடி அசுரர்களுக்கு தலைவனாக, ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசனாக வரத்தினால் வலிமையும், படைகளால் பெற்ற பலமும் நிரம்பிப்பெற்ற சூரபத்மன், வானவர்களின் வளங்களை பெற்று கொடுமை செய்தான். முருகன் அவனையும், அவனது படைகளையும் அழித்து இன்னல்களை தீர்த்தருளினான்.

    துன்பமுற்ற தேவர்களுக்கு நன்மை கிடைக்க செய்தவன் முருகப்பெருமான். முருகனின் ஞானசக்தியாகிய வேல் புறப்பகையாகிய அசுரர்களையும், அகப்பகையாகிய அசுர சம்பத்துகளையும் அடியோடு ஒழிக்கக்கூடிய வானவர்க்கு உண்டாகிய கொடிய வினைகளை தீர்த்து அருள்செய்த முருகனை நம்பியவர்களுக்கு வேறு ஒரு துணை வேண்டாம். மலைபோன்ற துன்பங்கள் நீங்கிட பழனி வரும் பக்தர்களுக்கு இன்பமே தவிர எந்நாளும் துன்பம் இல்லை என்று வாழ்வாங்கு வாழ்ந்திட வருகை தாருங்கள். முருகனின் அன்பும், அருளும் பெற அன்புடன் அழைக்கிறோம்.
    Next Story
    ×