search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோ பூஜை, அம்மனுக்கு 1008 சங்காபிசேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட 4 முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    கோவில் இணை கமிஷனர் வான்மதி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
    Next Story
    ×