search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோடிப் புண்ணியம் வழங்கும் கோமாதா வழிபாடு
    X

    கோடிப் புண்ணியம் வழங்கும் கோமாதா வழிபாடு

    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அது மட்டுமல்ல அது தரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.

    பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்து தயாரிக்கப்படும் “பஞ்சகவ்யம்” சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன. பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம்.

    பசுவின் உடல் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருந்தது. கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடிப்புண்ணியம் கிடைக்கும்.
    Next Story
    ×