என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதியில் வேட்டைக்கு சென்ற ஏழுமலையான்
Byமாலை மலர்17 Jan 2019 7:33 AM GMT (Updated: 17 Jan 2019 7:33 AM GMT)
அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேடு உற்சவமும், கோதாதேவி பரிநய உற்சவமும் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.
பார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
அந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.
பார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
அந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X