search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் தைப்பூச விழாஇன்று தொடங்குகிறது
    X

    கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் தைப்பூச விழாஇன்று தொடங்குகிறது

    கன்னியாகுமரி வேல்முருகன் கோவிலில் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதிஹோமம், காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, 8 மணிக்கு கொடியேற்றம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு பஜனை, இரவு 7 மணிக்கு சமயஉரை, 8 மணிக்கு சாமி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் யாகசாலை பூஜை, தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயஉரை, பஜனை போன்றவை நடைபெறுகிறது. தைபூச நாளான 21-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு ராஜமேளம், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கையில் சாமிக்கு ஆறாட்டு போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×