search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சின்னவடவாடியில் காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    சின்னவடவாடியில் காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

    மங்கலம்பேட்டை அருகே உள்ள சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான காவடி திருவிழா நேற்று நடந்தது.
    மங்கலம்பேட்டை அருகே உள்ள சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான காவடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை 11 மணி அளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால் மற்றும் இளநீரால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×