search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நடராஜர் சிவகாமசுந்தரியுடன் கோபுரவாசல் வழியாக வந்து அருள்பாலித்த காட்சி.
    X
    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நடராஜர் சிவகாமசுந்தரியுடன் கோபுரவாசல் வழியாக வந்து அருள்பாலித்த காட்சி.

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை நடராஜருக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.

    நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் கோபுர தரிசனம் நடந்தது.

    பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திருவெம்பாவை பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.

    வேலூர் சுக்கையா வாத்தியார் தெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத காசி விஸ்வநாதருக்கும், நடராஜருக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு கோபுர தரிசனமும், சாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×