search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்
    X

    முக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்

    காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    சூரிய தேவனை புகழ்ந்து பாடும் பெண் தெய்வமாய்; பிரம்ம தேவனின் மனைவி மற்றும் நான்கு வேதங்களின் தாயாக விளங்குகிறாள், இந்த காயத்ரி தேவி. அவள் தாமரை மீது அமர்ந்தவாறு ஐந்து தலைகள், பத்து கரங்கள் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

    அவளது கைகளில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் கோடாரி, சவுக்கை, தண்டாயுதம் போன்றவையும் இருக்கிறது. இந்த காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காயத்ரி மந்திரங்களை விசுவாமித்திர முனிவர் உருவாக்கினார்.

    இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    Next Story
    ×