search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்
    X

    ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

    ஸ்ரீநம்பெருமாள் ரத்னங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பாடு- அதிகாலை 4.15 மணி
    பரமபதவாசல் திறப்பு(லக்னப்படி)-காலை 5.30 மணி
    திருக்கொட்டகை பிரவேசம்-காலை 5.45 மணி
    சாதரா மரியாதை-காலை 7 மணி
    திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்-காலை 8 மணி
    அலங்காரம் அமுது செய்ய திரை-காலை 8-8.45 மணி
    பொதுஜன சேவை-காலை 8.45 மாலை 6 மணி
    அரையர் சேவை (பொதுஜன சேவையுடன்)-மாலை 4.15-5 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)- மாலை 6-8 மணி
    திருப்பாவாடை கோஷ்டி-இரவு 8-9 மணி
    வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை-இரவு 9-10 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)-இரவு 10.30-11 மணி
    புறப்பாட்டுக்கு திரை-இரவு 11.30-12 மணி
    திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு-இரவு 12 மணி
    வீணை வாத்யத்துடன் மூலஸ்தானம் சேருதல்- 19.12.2018 அதிகாலை 1.15 மணி
    அரையர் சேவை
    உயர்வற பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி முதல் பத்து 110 பாசுரங்கள்.
    மூலவர் முத்தங்கி சேவை
    சேவை நேரம்-காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    இரவு 7 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
    பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

    ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இதனால் அந்த 10 நாட்களும் இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி. அன்று முதல் 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த 10 நாட்களும் பரமபரவாசல் திறந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் பரமபதவாசல் வழியாக சென்று வர முடியும்.
    Next Story
    ×