search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்
    X

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

    வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. 18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. அன்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16-ந்தேதி நள்ளிரவு 12.30 முதல் வைகுண்டம் காத்திருப்பு அறை 1 மற்றும் 2-ல் அனுமதிக்கப்படுவார்கள்.

    அந்த அறைகள் நிரம்பியதும் ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவை நிரம்பியவுடன் மேதரமிட்டா அருகில் உள்ள எண்.1 கதவு வழியாக மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலிலும், அது நிறைந்தவுடன் வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் என ஒவ்வொரு பகுதியாக பக்தர்கள் காத்திருக்க அனுமதிக்கப் படுவார்கள். சரியாக 28 மணி நேரம் காத்திருப்பை அடுத்து 18-ந்தேதி காலை 5.30 மணிக்கு தர்ம தரிசனம் தொடங்கும்.

    அதன்பின் தரிசன வரிசை நகர தொடங்கும். 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும்.

    அதேபோல் பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல் அருகில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×