என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவிலில் மார்கழி மாதத்தில் பூஜை நேரம் மாற்றம்
Byமாலை மலர்15 Dec 2018 5:11 AM GMT (Updated: 15 Dec 2018 5:11 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் நடை திறப்பு, பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மார்கழி மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அதிகாலை 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறப்பு, 2.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.
அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் திருநாளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மார்கழி மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அதிகாலை 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறப்பு, 2.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும்.
அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் திருநாளில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X