search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈசன் படியளக்கும் இனிய திருநாள்
    X

    ஈசன் படியளக்கும் இனிய திருநாள்

    மார்கழி மாதம் 14-ம் நாள் (29.12.2018) அஷ்டமி திதிஅன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
    சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள் மார்கழி மாதம் 14-ம் நாள் (29.12.2018) சனிக்கிழமையன்று வருகின்றது. இந்த அஷ்டமி திதிஅன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.

    அன்றைய நாளில் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்குக் கிடைக்கும். பொருளாதார நிலையும் பெருகும். “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் கூறியதாக வர்ணிக்கப்படும் இந்த மார்கழி மாதம் மகத்தான மாதமாகும். காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய இந்த மாதத்தில் படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக முன்னேற்றம் வந்து சேரும்.

    அன்றைய தினம் இறைவன் சன்னிதியில் ஒரு ஸ்பூன் அளவு அரிசி வைத்து வழிபட்டு, அதை உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு பஞ்சமின்றி தினமும் உணவு கிடைக்கும் யோகமும் ஏற்படும்.

    Next Story
    ×