search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை
    X

    பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை

    அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அப்பொழுது விழித்திருந்து தேவர்கள், முன்னோர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.
    ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பர். ஒருசிலர் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி 8 மணிக்கு எழுந்திருப்பர். ஒரு சிலர் இன்று விடுமுறை தானே என்று 10 மணிக்கு எழுந்திருப்பர். இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.

    ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ ஆகும். அந்த நேரத்தில் தானே தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.
    Next Story
    ×