search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்கள்
    X

    ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்கள்

    ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த உபசாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

    1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
    2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
    3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

    4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
    5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
    6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
    Next Story
    ×