search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்புல்லாணி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    திருப்புல்லாணி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு, மேலத்தெரு மற்றும் ஜெகன் நகரில் அமைந்துள்ள புல்லாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

    கடந்த 13-ந் தேதி விநாய கர் பூஜை, வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், கும்பபூஜை, முதல் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு பிரதிஷ்டை சிலையை எடுத்து வைத்தல் மற்றும் மருந்து சாத்துதல் நடைபெற்றது

    14-ந்தேதி காலை புண்ணியாகவாசனம், கோபூஜை, சூரிய நமஸ்காரம் 2-ம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம் யாத்ரா தானம் நடந்தது. பின்னர் கடம் புறப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை சர்வசாதகம் பாபு சாஸ்திரி குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×