search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
    X

    வயலூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

    வயலூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை காலை 8 மணியளவில் சிங்கராவேலர் கேடயத்தில் வீதி உலா வந்தார்.

    பின்னர் சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும், மதியம் சண்முகார்ச்சனையும் நடந்தது. அன்று இரவு 8 மணிக்கு முறையே சிங்கார வேலர் சேஷம், ரிஷபம், அன்னம், வெள்ளி மயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நேற்று இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையும், அதனை தொடர்ந்து 10.40 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணியளவில் சிங்காரவேலர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனையடுத்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனையுடன் சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா- சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×