search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அர்த்தநாரீஸ்வரர் உணர்த்தும் உண்மை
    X

    அர்த்தநாரீஸ்வரர் உணர்த்தும் உண்மை

    அர்த்தநாரீஸ்வரர் மூலமாக சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.
    சிவனும் பார்வதியும் சரி பாதியாக கலந்த உருவமே ‘அர்த்தநாரீஸ்வரர்’. சிவபெருமானை மட்டுமே வழிபடும் பிருகு முனிவர், ஒரு முறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்று விட்டார்.

    இதனால் வருத்தம் அடைந்த பார்வதி, பூலோகம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததன் பயனாக, சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இருக்கும் வல்லமையை அடைந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலமாக இறைவன், இந்த உலகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிறுவுகிறார்.

    மேலும் சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.

    Next Story
    ×