என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தீபாவளியன்று முருகனுக்கு புத்தாடை
Byமாலை மலர்2 Nov 2018 7:46 AM GMT (Updated: 2 Nov 2018 7:46 AM GMT)
தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம். இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில், ‘கங்கா பூஜை’ நடைபெறும்.
முருகனுக்குப் பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர். கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்-உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம்.
இந்த நாளில், முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்.
முருகனுக்குப் பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர். கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.
தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்-உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம்.
இந்த நாளில், முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X