search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முகுந்தா... முகுந்தா...
    X

    முகுந்தா... முகுந்தா...

    எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.
    “எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம். அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்சிறைச்சாலையில் இருந்த வசுதேவர்- தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் , 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட் பதற்கே இனிமையாக இருக்கும். நாளரு மேனியும், பொழு தொரு வண்ண முமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண் களின் குடங்களை கல் விட்டு உடைப்பது... வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வடஇந்தியாவில் இரவு 12 மணி வரை யிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.
    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    புல்லாங்குழல்

    கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன் அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, ‘திவ்விய பிரபந்தம்’ அழகாகப் பாடுகின்றது.

    நமது உடல் ஒன்பது துவாரங்கள் உடையதாக உள்ளது. அவை கழிவுகளை வெளியேற்றப்பயன்படுகின்றன. ஆனால் அழியக்கூடிய இந்த உடலை ‘கிருஷ்ண சேவை’க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும்.
    Next Story
    ×