search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னேற்றம் தரும் மகாளய அமாவாசை
    X

    முன்னேற்றம் தரும் மகாளய அமாவாசை

    முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர்.
    ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வது வழக்கம். ஒரு சிலருக்கு தன்னுடைய தாய் தந்தையரின், முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கும். அவர்கள் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் நன்மைகள் விளையும் என்பதால் ஏற்பட்ட சொல் அது.

    முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் மகாளய அமாவாசை என்பதை மறந்து விடாதீர்கள். இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள், இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் ஏற்றுக்கொள்வர். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், தைமாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரக்கூடிய அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பு வாய்ந்தவைகளாகச் சொல்வர்.

    இந்த மகாளய அமாவாசை புரட்டாசி மாதம் 22-ந் தேதி (8-10-2018) திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். 
    Next Story
    ×