search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முகூர்த்த ஓலை எழுதுவது எப்படி?
    X

    முகூர்த்த ஓலை எழுதுவது எப்படி?

    பெண்ணிற்குப் பொருத்தமான நாளாகவும், மாதவிலக்கு இல்லாத நாளாகவும் தேர்ந்தெடுத்து, அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்துத் திருமண ஓலை எழுத வேண்டும்.
    தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகத்தைக் கொடுத்து பொருந்துகின்றதா? என்று பார்க்க வேண்டும். நல்ல பொருத்தமாக இருந்தால், பிறகு மணமகளுக்கு மணமகனைப் பிடித்திருக்கிறதா?, மணமகனுக்கு மணமகளைப் பிடித்திருக்கிறதா? என்றும் கேட்டு முடிவு செய்து, அதன்பிறகு நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுப்பர்.

    நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு முகூர்த்த ஓலை எழுதுவர். மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறித்தால், குறித்து முடிந்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பார்கள். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகின்ற பொழுது, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய பிறகே திருமண ஓலை எழுத வேண்டும்.

    பெண்ணிற்குப் பொருத்தமான நாளாகவும், மாதவிலக்கு இல்லாத நாளாகவும் தேர்ந்தெடுத்து, அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்துத் திருமண ஓலை எழுத வேண்டும். அதை வெற்றிலைப் பாக்கு தட்டில் வைத்து, விநாயகர் படத்தின் முன்னால் நின்று, சம்பந்தம் செய்து கொள்பவர்கள் தட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னார் மகனுக்கு இன்னார் மகளைத் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப் பெற்றிருக்கிறது என்று, பூஜை அறையிலுள்ள தெய்வப் படத்தின் முன்னால் வாசித்துவிட்டு சம்பந்திகள் தட்டு மாற்றிக் கொள்வது உகந்தது. 
    Next Story
    ×