search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 24-ந்தேதி நடக்கிறது
    X

    திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் 24-ந்தேதி நடக்கிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா தொடக்கமாக வருகிற 24-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அப்போது பக்தர்கள் வெள்ளத்தால் திருவண்ணாமலை நகரமே திக்குமுக்காடும். லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த விழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந் தேதி மகா தீப பெருவிழா நடக்கிறது. அன்று திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

    இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தமும், கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.

    பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் திருக்கோயில் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெறும்.

    இந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×