என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி மாதத்தின் சிறப்புகள்
Byமாலை மலர்20 July 2018 10:16 AM GMT (Updated: 20 July 2018 10:16 AM GMT)
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும்.
ஆடிப்பூர மகிமை
* உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.
* ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.
* அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.
* ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி பவுர்ணமி
* ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.
* சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.
ஆடி வழிபாடு
* ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
* ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.
* ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
ஆடிப்பெருக்கில் முளைப்பாரி
ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
* உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.
* ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.
* அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.
* ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடி பவுர்ணமி
* ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.
* சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.
ஆடி வழிபாடு
* ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
* ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.
* ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
ஆடிப்பெருக்கில் முளைப்பாரி
ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X