search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள ஐயா வைகுண்டர் அவதாரபதியில் 186-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலையில் கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடிமரத்தை 5 முறையும் சுற்றி வலம் வரும். தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு ஆடி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் ஐயா பவனி வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, மதியம் 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகபடிப்பு, பணிவிடை, மாலை 6 மணிக்கு றது.

    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் மாலையில் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஐயா எழுந்தருளி, பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.11-ம் திருநாளான வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.05 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 
    Next Story
    ×