என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சீனிவாசப்பெருமாள் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்11 July 2018 4:43 AM GMT (Updated: 11 July 2018 4:43 AM GMT)
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில் வருடந்தோறும் ஆனித்திருவிழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் நவக்கலச பூஜை, பாராயணம், கருடாழ்வார் பூஜை நடைபெற்று, கொடிமரம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது.
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித் தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த திருவிழாவில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 14-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 16-ந் தேதி திருக்கல்யாணமும், 18-ந் தேதி திருத்தேர் நகர்வலம் வருதலும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் சீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித் தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த திருவிழாவில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 14-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 16-ந் தேதி திருக்கல்யாணமும், 18-ந் தேதி திருத்தேர் நகர்வலம் வருதலும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X