search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    புற்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    கிருமாம்பாக்கம் வம்பாபேட் புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கிருமாம்பாக்கம் வம்பாபேட் புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    புதுவை கிருமாம்பாக்கம் வம்பாபேட்டில் புற்றுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகவிழா நேற்று காலை விக்னேஷ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று காலை 2-ம்கால யாகபூஜை, யாத்ராதானம், கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கோவில் கோபுரத்துக்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×