search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நாளை நடக்கிறது
    X

    வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நாளை நடக்கிறது

    வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
    வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. கடந்த 22-ந்தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலையில் ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.

    தொடர்ந்து 24-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான், அரசு செயலர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி வரை ஊஞ்சல் உற்சவமும், 2-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×