search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும், மேலும் பிரதோஷம் என்பதாலும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நகரின் மையப் பகுதியில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    கோவிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும், மேலும் பிரதோஷம் என்பதாலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    Next Story
    ×