search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெறும்பூர் நறுங்குழல்நாயகி-எறும்பீஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    திருவெறும்பூர் நறுங்குழல்நாயகி-எறும்பீஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

    புராதன சிறப்பு மிக்க திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவெறும்பூரில் புராதன சிறப்பு மிக்க எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்லக்கு, கைலாச, அன்ன வாகனங்களில் வீதியுலா வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று உமையவள் நறுங்குழல் நாயகிக்கும், எறும்பீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்பகுளத்தில் தண்ணீர் உள்ளதால் 30-ந் தேதி தெப்ப திருவிழாவை நடத்திட கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 
    Next Story
    ×