search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் தங்க வேலுக்கு புனித நீரால் அபிஷேகம்
    X

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் தங்க வேலுக்கு புனித நீரால் அபிஷேகம்

    திருப்பரங்குன்றம் கோவில் வருடாபிஷேகத்தையொட்டி முருகப்பெருமானின் கையில் உள்ள தங்கவேலுக்கு புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 8-வது ஆண்டு வருடாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் யாகசாலையில் இருந்து கருவறைக்கு மேளதாளங்கள் முழங்க புனிதநீர் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    இதையடுத்து கருவறையில் உள்ள முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கு குடத்தில் இருந்து புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். வருடாபிஷேகத்தையொட்டி கருவறையில் முருகப் பெருமானுக்கு புனுகு தைலம் சாத்தப்பட்டது.

    இதேபோல கருவறையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகர், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சாம்பிராணி தைலம் சாத்தப்பட்டது. முன்னதாக சமவேளையில் 5 சன்னதியிலும் மகா அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர்கள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். 
    Next Story
    ×