search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கே.சென்னம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது
    X

    கே.சென்னம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது

    மதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது.
    மதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநந்தவனத்து விநாயகர், ஸ்ரீஆதிமாரியம்மன், ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 25-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்க உள்ளது.

    தொடர்ந்து கோபூஜை, மாலையில் யாகசாலை பூஜை போன்றவை நடக் கின்றன. 2-ம் நாளிலும் யாகசாலை பூஜைகள், தீபாராதனை போன்றவை நடக்கின்றன.

    27-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
    Next Story
    ×