search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நிறைவுபெற்றது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நிறைவுபெற்றது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர் திருவிழாவுடன் நிறைவு பெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ந் தேதி தங்க கருட வாகனத்திலும், 12-ந் தேதி காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்தார். அன்று மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரை தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. நேற்று இரவு ஆளும்பல்லக்குடன் தேர் திருவிழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×