search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓலைப்பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் தேரை தலையில் சுமந்து சென்ற காட்சி.
    X
    ஓலைப்பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் தேரை தலையில் சுமந்து சென்ற காட்சி.

    தொட்டியம் அருகே ஓலைப்பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா

    தொட்டியம் அருகே கிடாரத்தில் ஓலைப்பிடாரி காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை தலையில் சுமந்து சென்றனர்.
    தொட்டியம் அருகே கிடாரம் கிராமத்தில் உள்ள ஓலைப்பிடாரி காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் காலை பனை ஓலையால் வடிவமைக்கப்பட்ட பிடாரி காளியம்மன் 29 அடி உயரம் உள்ள தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரை தலையில் சுமந்து கொண்டு கிடாரம், மேலூர், குண்டாங்கல்பாளையம், அய்யம்பாளையம், சூரம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்றனர்.

    அந்த கிராமங்களுக்கு தேர் சென்றபோது பக்தர்கள் மாவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியும், கிடாவெட்டு பூஜையும் நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழாவிற்காக மீண்டும் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மீண்டும் தேர் கிடாரம் கோவிலை வந்தடைந்து திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், ஊர்பொதுமக்களும் செய்துள்ளனர். 
    Next Story
    ×