search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரி

    திருவண்ணாமலை அய்யங்குளத்தில் சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 19-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. பின்னர் 20-ந் தேதி முதல் நேற்று வரை 10 நாட்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலில் இருந்து அய்யங்குளத்திற்கு சாமி புறப்பாடு நடந்தது. இதனையடுத்து அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    அருணாசலேஸ்வரர் - உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    பின்னர் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சாமி அய்யங்குளத்தில் இருந்து புறப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சாமிக்கு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 
    Next Story
    ×