என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆன்மிக வழிபாட்டு அரிய தகவல்கள்
Byமாலை மலர்16 April 2018 7:25 AM GMT (Updated: 16 April 2018 7:25 AM GMT)
இந்து ஆன்மிக வழிபாட்டில் சில அரிய தகவல்களை இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆதி பைரவர் தலம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.
தனியாக முருகப்பெருமான்
கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத் தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங் கலம் என்ற ஊர். இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
வடுவுடன் சிவபெருமான்
குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.
வடுவுடன் சிவபெருமான்
குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.
தாம்புக்கயிறு துலாபாரம்
கேரள மாநிலம் திருச்சூர்- எர்ணாகுளம் சாலையில் உள்ளது திருக்கூர் என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், தங்களின் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்ப தாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய் நீங்கியதும் தாம்புக் கயிறு துலாபாரம் கொடுக்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறு கோவில் மண்டபத்தில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம். வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது. சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும். பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.
தனியாக முருகப்பெருமான்
கரூர் அருகே உள்ளது வெண்ணெய் மலை என்ற திருத் தலம். இந்த மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால், இங்கு அருளும் முருகப்பெருமான் தன்னுடைய வேல், மயில் இல்லாமலும், தனது தேவியர்களான வள்ளி- தெய்வானை ஆகியோர் இல்லாமலும் தனியாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங் கலம் என்ற ஊர். இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
வடுவுடன் சிவபெருமான்
குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.
வடுவுடன் சிவபெருமான்
குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை என்ற ஊர். இங்குள்ள இறைவன் ரத்தினகிரீஸ்வரர் என்றும், வாட்போக்கி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனின் தலையில் மிகப்பெரிய வடு இருக்கிறது. அது ஒரு மன்னன் வாளால் வெட்டியதால் ஏற்பட்ட வடு என்று தல வரலாறு கூறுகிறது.
தாம்புக்கயிறு துலாபாரம்
கேரள மாநிலம் திருச்சூர்- எர்ணாகுளம் சாலையில் உள்ளது திருக்கூர் என்ற ஊர். இங்குள்ள சிவன் கோவிலில் ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு உள்ளவர்கள், தங்களின் நோய் குணமாக தாம்புக்கயிறு துலாபாரம் கொடுப்ப தாக வேண்டிக்கொள்கிறார்கள். நோய் நீங்கியதும் தாம்புக் கயிறு துலாபாரம் கொடுக்கிறார்கள். இப்படி வழங்கப்பட்ட தாம்புக்கயிறு கோவில் மண்டபத்தில் கட்டி தொங்கவிடப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X