search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பச்சை தண்ணீர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், தண்ணீரில் விளக்கு எரிந்த காட்சியையும் காணலாம்.
    X
    பச்சை தண்ணீர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், தண்ணீரில் விளக்கு எரிந்த காட்சியையும் காணலாம்.

    அம்மன் கோவில் திருவிழாவில் தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்

    ராசிபுரம் அருகே அம்மன் கோவில் திருவிழாவில் தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்திபெற்ற பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது தண்ணீரில் கோவில் விளக்கை எரிய வைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, பூசாரிகள் கோவில் கிணற்றில் புனித நீராடி குடத்தில் தண்ணீரை எடுத்து வந்தனர்.

    அப்போது அவர்கள் அம்மன் சாமி முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றினர்.

    பின்னர் அந்த விளக்கில் தீபம் ஏற்றிய போது, விளக்கு எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் தீபம் சுடர்விட்டு எரிந்தது. இந்த அதிசய காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் எரிந்து பின்னர் அணைந்தது. அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்பட்டது.

    தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம் திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயை கொண்டு தான் விளக்கு எரிய வைக்கப்படும். இந்த திருவிழாவில் ராசிபுரம், தட்டான்குட்டை, மும்பை, சேலம் போன்ற இடங்களில் இருந்து பலர் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசித்தனர்.

    இந்த அதிசய வழிபாடு குறித்து கோவில் பூசாரிகள் கூறியதாவது:-

    முன்னோர் காலத்தில் ஒரு முறை கோவில் விளக்கில் எண்ணெய் தீர்ந்துபோனதாகவும், அப்போது கோவில் பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் அம்மனுக்கு விளக்கு வைக்க எண்ணெய் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்ற வை விளக்கு எரியும் என்றும் கூறியுள்ளார்.

    அதே போல் கோவில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது அம்மன் சாமி முன்பு பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. அப்போது தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை பார்த்த கோவில் பூசாரிகளும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் ‘பச்சை தண்ணீர் மாரியம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    இவ்வாறு கோவில் பூசாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×