search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    சுவாமி, தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. கடந்த 27-ந் தேதி கருட சேவையும், 31-ந் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்திலும் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.

    10-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுவாமி தேருக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ராஜகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பழமையான தேரை புதுப்பிக்க வலியுறுத்தி பக்தர்கள் பேரவையினர் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பக்தர்கள் மறியலை கைவிட்டு, விட்டு கலைந்து சென்றனர்.

    நேற்று இரவில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×