என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முக்தி அடைந்த தினம் திருவாலங்காடு கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
Byமாலை மலர்31 March 2018 8:37 AM GMT (Updated: 31 March 2018 8:37 AM GMT)
முக்தி அடைந்த தினம் திருவாலங்காடு கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
செவ்வாய்பேட்டை, மார்ச். 31-
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் வடரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவன் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். வண்டார்குழலி அம்மன் அருள்பாலிக்கிறார், காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில் தான் முக்தி அடைந்தார்.
அவர் முக்தி அடைந்த தினம் ஏப்ரல் 2-ந் தேதி ஆகும். இதையடுத்து இந்த கோவிலில் காரைக்கால் அம்மையார் விழா நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
நாளை (1-ந் தேதி) இரவு 10 மணிக்கு விழா தொடங்குகிறது. அப்போது காரைக்கால் அம்மையார் புஷ்பநாக உற்சவம் மற்றும் பரிகார பூஜை நடக்கிறது.
நாளை மறுநாள் (2-ந் தேதி) காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற நாள் என்பதால் அன்று அவர் திருவாலங்காட்டை சுற்றியுள்ள கிராமங்களை வலம் வரும் வீதிஉலா நடக்கிறது.
அன்று சிறப்பு பூஜை, அன்னதானமும் நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X