search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா 25-ந்தேதி தொடக்கம்
    X

    தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா 25-ந்தேதி தொடக்கம்

    மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
    மதுரை நேதாஜி ரோட்டில் தண்டாயுதபாணி சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்து திருத்தொண்டர் தொகை பாடி சைவம் தழைக்க வழி செய்த தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சாமிகள் இந்த ஆலயத்தை வழிபட்டதன் காரணமாக, இத்திருத்தலம் பழங்காலத்தில் சுந்தரர் மடம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

    இங்குள்ள முருகப்பெருமானுடைய தெய்வத்திருவுருவம் முன்னாளில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று பழனி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது வழக்கமாக இருந்துள்ளதால் இந்த கோவிலை பழனியாண்டவர் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு ஸ்கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகாஅபிஷேகம், தங்க கவச சாத்துப்படி செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜைகளை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    27-ந்தேதி காலை 6 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் காவடி செலுத்துதலும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய தினமான 30-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா அன்று காலை 5 மணிக்கு மூலவருக்கு விஷேச அபிஷேகம், தங்க கவச சாத்துபடி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில் உற்சவர் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார். நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்கிறார். 31-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் அன்னதானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்து வருகிறார்.
    Next Story
    ×