என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா: 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
Byமாலை மலர்22 March 2018 5:51 AM GMT (Updated: 22 March 2018 5:51 AM GMT)
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழாவில் 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தூக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது.
திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழாவையொட்டி, அம்மன் திருமுடிகள் வட்டவிளையில் அமைந்திருக்கும் பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து தூக்க திருவிழா தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்டியோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று சிறப்பு வாய்ந்த தூக்க திருவிழா நடந்தது. இதையொட்டி முட்டுகுத்தி நமஸ்காரத்தை தொடர்ந்து, கோவிலில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் அம்மன் எழுந்தருளினார்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
அதைதொடர்ந்து தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கண்ணநாகம் வழியாக கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே நேற்று பகலிலும், இரவிலும் தொடர்ந்து தூக்க நேர்ச்சை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு காங்கிரீட் தளம் போடப்பட்டுள்ளதால் தூக்க வில் வண்டி இழுப்பவர்கள் எளிதாக கோவிலை சுற்றி வரமுடிந்தது. தூக்க திருவிழாவை காண குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகம், கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் சூர்யதேவன் தம்பி ஆகியோர் தலைமையிலான நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
திருமணம் முடிந்து குழந்தை பேறு கிடைக்கப் பெறாத தம்பதியினர், குழந்தை பேறு வேண்டி பத்ரகாளி அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சை செலுத்துகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழாவையொட்டி, அம்மன் திருமுடிகள் வட்டவிளையில் அமைந்திருக்கும் பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு கடந்த 12-ந் தேதி மேள தாளம் முழங்க கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து தூக்க திருவிழா தொடங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்டியோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நேற்று சிறப்பு வாய்ந்த தூக்க திருவிழா நடந்தது. இதையொட்டி முட்டுகுத்தி நமஸ்காரத்தை தொடர்ந்து, கோவிலில் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் அம்மன் எழுந்தருளினார்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
அதைதொடர்ந்து தூக்கக்காரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மேளதாளம் முழங்க நடைபெற்றது. கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கண்ணநாகம் வழியாக கோவில் வளாகத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 1,546 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே நேற்று பகலிலும், இரவிலும் தொடர்ந்து தூக்க நேர்ச்சை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு காங்கிரீட் தளம் போடப்பட்டுள்ளதால் தூக்க வில் வண்டி இழுப்பவர்கள் எளிதாக கோவிலை சுற்றி வரமுடிந்தது. தூக்க திருவிழாவை காண குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகம், கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் சூர்யதேவன் தம்பி ஆகியோர் தலைமையிலான நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X