search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரை திருவிழா மூகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    சித்திரை திருவிழா மூகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18-ந்தேதி தொடங்குகிறது

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி கீழமாசி வீதி தேரடியில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.05 மணி முதல் 10.29 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 25-ந்தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 26-ந்தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 27-ந்தேதி காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் நடக்கிறது. 28-ந் தேதி தேரோட்டமும், 29-ந்தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சித்திரை திருவிழாவை வரவேற்கும் வண்ணம் கோவில் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் சித்திரை திருவிழா வருவதை தெரிவிக்கும் வண்ணம் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, காளைகள் முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் முகூர்த்தகால் நடப்பட்டது.

    சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×