search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில் வெயில் பட்டதும் தங்க நிறமாக மாறிய நந்தி
    X

    செங்கம் ரிஷபேஸ்வரர் கோவிலில் வெயில் பட்டதும் தங்க நிறமாக மாறிய நந்தி

    செங்கத்தில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறும்.
    செங்கத்தில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், சங்காபிஷேகம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, கோபூஜை, பிரதோஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

    அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ம் நாள் மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை நந்தி பகவான் மீது மாலை வெயில் பட்ட உடன் நந்தி தங்க நிறத்தில் மாறும். இந்த நிகழ்வு நேற்று முன்தினம் நடந்தது. நந்தி சிலை மீது வெயில் பட்டதும், நந்தி பகவான் தங்க நிறத்தில் மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×